Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி
, சனி, 18 ஏப்ரல் 2015 (13:40 IST)
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.
 

 
இந்த குண்டுவெடிப்பு, ஒரு வங்கிக்கு வெளியில் நிகழ்ந்ததாக, நங்கபர் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தற்கொலைத் தாக்குதல் மூலம் இந்த குண்டுவெடிப்பை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, அரசு ஊழியர்களும் ராணுவ வீரர்களும் தங்களது ஊதியத்தைப் பெறுவதற்காக நியு காபூல் பேங்க் என்ற அந்த வங்கிக்கு வெளியில் காத்திருந்தனர்.
 
webdunia

 
சனிக்கிழமையன்று காலையில் ஜலாலாபாதில் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு அருகிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
 
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil