Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேக் சாப்பிடும் போட்டியில் உயிரிழந்த பெண்

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (15:00 IST)
ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.
 
ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய நாள் கொண்டாடப்பட்டதையடுத்து ஹெர்வே பே என்னும் ஹோட்டலில் நடந்த கேக் சாப்பிடும் போட்டி நடந்தது.
 
அறுபது வயது பெண் ஒருவர் அதில் கலந்துகொண்டார். அப்போது ஆஸ்திரேலியாவின் பிரபலமான லேமிங்டன் கேக்கை அவர் சாப்பிட்ட சில நொடிகளில் உணர்ச்சியற்ற நிலையை அடைந்தார் என கூறப்படுகிறது.
 
லேமிங்டன் என்னும் கேக் வெண்ணெய்யால் செய்யப்பட்டு சாக்லேட் சாஸால் கோட்டிங் செய்யப்பட்டு உலர்ந்த தேங்காய் துருவல் தூவப்பட்டிருக்கும். இந்த சம்பவம் நடக்கும் முன் லேமிங்டன் கேக்கை போட்டியாளர்கள் அனைவரும் சாப்பிடுவது படம் பிடிக்கப்பட்டது.
 
உயிரிழந்த பெண் அசௌகரியங்களை உணரும் முன்பு, போட்டி நடைபெற்ற இடத்தில் இருந்த கேக்கை எடுத்து சாப்பிட்டார் என நேரில் பார்த்த சில சாட்சியங்கள் கூறுகின்றனர்.
அந்த காணொளியில் சம்பவம் நடக்கும் முன்னர் அங்கிருந்த அனைவரும் போட்டியாளர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். போட்டியாளர்களுக்கு முன் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது.
 
இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஹெர்வே ஹோட்டல் சார்பில் ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இந்த சம்பவம் நிகழ்ந்த போது ஆம்புலன்ஸின் சேவைக்காக நன்றியும் தெரிவித்திருந்தனர். 
 
ஆஸ்திரேலியா நாளுக்காக கேக் உண்ணும் போட்டிகள் நடத்தப்படுவது அங்கு மிகவும் பிரபலமாகும். முதல் முறையாக ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததை குறிக்கும் விதமாக ஆஸ்திரேலியா நாள் கொண்டாடப்படுகிறது.
 
குறிப்பிட்ட நேரத்தில் லேமிங்டன் கேக், பைஸ், ஹாட் டாக் போன்ற உணவுகளை எவ்வளவு அதிகம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிட்டு போட்டியாளர்கள் இதில் பரிசுகளை வெல்வார்கள்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments