வங்கதேசத்தில் மூன்றடுக்கு படகில் தீ விபத்து 32 பேர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (11:51 IST)
வங்கதேசத்தில் இன்று காலை படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் தலைநகர் தோகாவில் இருந்து 250 கி.மீ தூரத்தில் ஜகாகதி பகுதியில் நடு ஆற்றில் இந்த தீ விபத்து இன்று காலை நடைபெற்றுள்ளது. ஓபிஜான் 10 என்கிற மூன்றடுக்கு கொண்ட படகில் தீ விபத்து ஏற்பட்டது.
 
படகில் பயணித்த பலர் ஆற்றில் குதித்து தப்பியுள்ளனர். அதே நேரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 
இது குறித்து அப்பகுதி காவல்துறை தலைமை அதிகாரி மொய்னுல் கூறுகையில், "தற்போது வரை 32 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளோம். பெரும்பான்மையானவர்கள் தீயினால் இறந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்." என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments