Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26,000 பேர் சாலையோரத்தில் உறங்கும் அவலம் - அமெரிக்க நகரத்தின் நிலைமை

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2015 (20:24 IST)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம், அங்கு நிலவும் வீடற்றவர்கள் பிரச்சனையை பொது அவசர நிலையாக பிரகடனப்படுத்தி இருக்கிறது.
 

 
இந்தப் பிரச்சனையை சமாளிக்க 100 மிலியன் டாலர்கள் ஒதுக்குவதாக நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
சுமார் 26,000 பேர் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் தெருவோரங்களில் வாழ்வதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டாண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கையைவிட 10 சதவீதம் அதிகம்.
 
அதிக வாடகை, குறைந்த ஊதியம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைதான் இந்த நிலைக்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த விரும்புகிறது.
 
இந்த நிலையில், நகரத்தை பல தசாப்தங்களாக பீடித்துள்ள இந்த வீடற்றவர்கள் பிரச்சனை உடனடியாக சமாளிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

Show comments