Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 பேர் பலி - பாகிஸ்தான்

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2014 (18:04 IST)
பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 16 தீவிரவாதச் சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹைபர் பழங்குடியின மாவட்டத்தில், தீவிரவாதிகளின் மறைவிடம் என்று நம்பப்படும் ஒரு வளாகத்தை இலக்கு வைத்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இராணுவம் கூறுகிறது.
 
தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த மாத முற்பகுதியில் 23 பேர் பலியாகக் காரணமான குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே இந்த கிளர்ச்சிக்காரர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மோதல் நிறுத்தத்தை பாகிஸ்தானிய தலிபான்கள் கடந்த வாரம் அதிகாரபூர்வமாக முடித்துக்கொண்டார்கள், ஆனால் முறிந்துபோன சாமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடருகின்றன.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments