Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16 பேர் பலி - பாகிஸ்தான்

16 பேர் பலி - பாகிஸ்தான்
, வியாழன், 24 ஏப்ரல் 2014 (18:04 IST)
பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 16 தீவிரவாதச் சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹைபர் பழங்குடியின மாவட்டத்தில், தீவிரவாதிகளின் மறைவிடம் என்று நம்பப்படும் ஒரு வளாகத்தை இலக்கு வைத்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இராணுவம் கூறுகிறது.
 
தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த மாத முற்பகுதியில் 23 பேர் பலியாகக் காரணமான குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே இந்த கிளர்ச்சிக்காரர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மோதல் நிறுத்தத்தை பாகிஸ்தானிய தலிபான்கள் கடந்த வாரம் அதிகாரபூர்வமாக முடித்துக்கொண்டார்கள், ஆனால் முறிந்துபோன சாமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடருகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil