Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானியப் போர் வன்முறை குறித்து ஷின்ஷோ அபே வருத்தம்

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (10:42 IST)
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானிய வன்முறை ஆக்ரமிப்பு குறித்து ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
 


அமெரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஷின்ஷோ அபே பேசுகையில், தனது நாடு செய்ததைப் பற்றி கண்டும் காணாமல் அது இருக்க முடியாது என்றார்.
 
போரின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த ஆண்டில், அபேயின் கருத்துக்கள் கவனமாகக் கேட்கப்பட்டன.
 
ஆனால், அவர் இந்தப் போரின்போது கொல்லப்பட்ட அமெரிக்கர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்த போதும், ஜப்பான் ஆசிய மக்களுக்கு வலியைத் தந்தது என்று ஒப்புக்கொண்டபோதும் அவருக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது.
 
எதிர்காலத்தில் அமைதி மற்றும் சுபிட்சத்தை கொண்டுவர தான் எல்லா முயற்சிகளையும் எடுப்பேன் என்று அவர் கூறினார்.
 
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜப்பானியப் பிரதமர் ஒருவர் பேசுவது இதுவே முதன்முறை.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments