தமிழ்.வெப்துனியா.காம்: சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் வாழக்கூடிய மக்களுக்கு எந்த அளவிற்கு அழுத்தங்கள் இருக்கிறதோ, அந்த அளவிற்கு எந்த அழுத்தம் இல்லாத திருப்பூர் என்ற நகரத்தில் அதிகமான தற்கொலைகள் நிகழ்வது என்பது ஒரு விநோதமான செயலாக இருக்கிறது. திருப்பூர் என்பது சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் சுலபமாக உள்ள இடம். அந்த இடத்தில் வாழ்வது என்பது சுலபமாக இருக்கும்போதும் ஏன் அங்கு இவ்வளவு தற்கொலைகள் நிகழ்கிறது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன ்: தமிழகத்தை எந்தெந்தக் கோள்கள் எந்தெந்தப் பகுதிகளை ஆள்கிறது என்று பார்த்து வைத்திருக்கிறோம். கோயம்புத்தூரைப் பார்த்தால் மகரத்தினுடைய ஆதிக்கத்திலும், சனியுனுடைய ஆதிக்கத்திலும் வருகிறது. இதுபோல, திருப்பூரைப் பார்த்தால் அது புதனுடைய ஆதிக்கத்தில் வருகிறது. இந்தப் புதன் என்பது வேகமாக இயங்கக்கூடிய கோள். இருப்பதிலேயே வேகமாக சிந்திக்கக்கூடிய கிரகம்.
சந்திரனை மனோகாரகன் என்று சொல்கிறோம். ஆனால் அந்த எண்ணங்களை செயல்படுத்துவது, மாறுபட்ட சிந்தனைகளைக் கொடுப்பது, முயற்சி செய்து பார்ப்போமே என்று கொஞ்சும் ரிஸ்க் எடுப்பது புதன்தான். அந்த புதன் கிரகம் ஆளக்கூடிய பகுதி திருப்பூர். மேலும் மிதுன ராசியில்தான் இந்த நகரம் வருகிறது. புதன் என்பது ஒன்று கிட்டவில்லையென்றால் அதோடு முடிந்துவிட்டதாகச் முடிவு செய்யக்கூடியது என்று சொல்லலாம்.
முடிந்த வரையில் எல்லா கோணங்களிலும் முயற்சி செய்துவிட்டோம். இதற்குமேல் ஒரு பெரிய சக்தி வந்து நமக்கு உதவி அந்தக் காரியத்தை முடிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தன்னையே முடித்துக் கொள்வோம் என்பது போன்ற சிந்தனையையும் புதன் கொடுக்கும். தற்பொழுது மிதுன ராசிக்கு நேரம் சரியில்லை. ராசியிலேயே கேது, ராசிக்கு 4ல் சனி, ராசிக்கு 10ல் குரு இதுபோன்ற கோச்சார கிரகங்களெல்லாம் தற்போது சரியில்லாமல் இருக்கிறது. இது மே மாதம் வரைக்கும் நீடிக்கும். ஜூனில் இருந்து இதுபோன்ற தற்கொலைகளெல்லாம் குறையும்.
ஆனால், பொதுவாக புதன் என்பது அடங்காத முடிவெடுத்து எல்லாவற்றையும் செய்யக்கூடியது. கன்னி ராசியும் புதனுடைய ராசிதான். ஆனால், அதில் இருக்கும் புதன் கொஞ்சம் வலிமையானது. அது மறுபடியும் மறுபடியும் பல கோணங்களில் முயற்சிக்கும். ஆனால் மிதுனம் அப்படி கிடையாது. தனக்குத்தானே முடிவெடுத்துக் கொள்வது, தனக்குத்தானே சுருக்கிக் கொள்வது, தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது போன்று கொடுக்கக்கூடியது.