Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
, செவ்வாய், 24 மார்ச் 2009 (18:35 IST)
பாகிஸ்தானின் தற்போதைய கிரக அமைப்பு சரியாக இல்லை. இந்தியாவுக்கும் சரி, பாகிஸ்தானுக்கும் சரி தற்போது 8இல் செவ்வாய் மறைந்து கிடக்கிறது.

இந்த நிலை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கிறது. அந்தக் காலகட்டம் வரை கடுமையான கலகங்கள், போராட்டங்கள், ஆட்சியிழப்பு, பதவி பறிப்பு, குண்டு வெடிப்புகள் ஏற்படும்.

மேலும், தற்போது செவ்வாயை சனியும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக இவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டாலே மேற்கூறிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதுடன், அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் கீழ்த்தரமாக விமர்சிப்பது உள்ளிட்ட சூழல் உருவாகும்.

பாகிஸ்தானைப் பொறுத்த வரை அடுத்தடுத்து மோசமான சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பின்னர் ராணுவ ஆட்சி மீண்டும் வருவதற்கும், ராணுவத்திற்கு உள்ளேயே பிளவு/பிரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil