ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனினும், உடனடியாக அந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. குரு பெயர்ச்சிக்கு (டிசம்பர் 15) பின்னர் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
ஜோதிடத்தில் மனிதாபிமானத்திற்கு உரிய கிரகமாக குரு கருதப்படுகிறது. தற்போது அந்த குரு மகரத்தில் நீச்ச கதியில் உள்ளார். இதன் காரணமாகவே உலகெங்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.
வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குப் பின்னர் குரு கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அந்தக் காலகட்டத்தில் முகாமில் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் விடிவு காலம் பிறக்கும்.