Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சா‌ய்பாபா மறு அவதார‌ம் எடு‌ப்பாரா?

சா‌ய்பாபா மறு அவதார‌ம் எடு‌ப்பாரா?
, சனி, 21 மே 2011 (20:13 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சத்யா சாய்பாபா உடலை நீத்துவிட்டார். அவரைப் பற்றி கூறுங்கள்.

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சாமுத்திரா லட்சணங்கள் படி அவருக்கு மூக்கும் நெற்றியும் இணையும் இடத்தில் ஒரு கட்டு இருக்கும். இதுபோன்று உள்ளவர்களுக்கெல்லாம் சித்து அமைப்புகளெல்லாம் கூடிவரும். சிலருக்கு நாசி நீளமாக இருக்கும். அவர்களுடைய அமைப்பு வேறு. அதற்கடுத்து கால் அமைப்பை வைத்தும் நிறைய சொல்லலாம். இவர்களெல்லாம் சித்தர்களாகவும் இருந்து பல சித்து விளையாட்டுகளையும் விளையாடி, சமூகத்தில் அனைவருக்கும் பயன்தரக்கூடிய அமைப்புகளையும் செய்தார்கள்.

சாய்பாபாவைப் பொறுத்தவரையில் ஜீவ சமாதி என்று சொல்லலாம். ஏனென்றால், அவர் அடுத்தடுத்து தோன்றி பல நல்லவற்றை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. ஏனென்றால், அவர் உயிர் நீத்த நாள், நட்சத்திரமெல்லாம் என்ன சொல்கிறதென்றால், மீண்டும் அவருக்குப் பிறப்பு உண்டு. மீண்டும் அவர் வந்து சேவை செய்வதற்கான அமைப்புகள் வலிமையாக இருக்கிறது. விரைவில் அவருடைய பிறப்பு நடைபெறும்.

துலாத்தில் சனி வரும் போது அவருடைய பிறப்பு இருக்கும். 21.12.2011க்குப் பிறகு துலாம் ராசியில் சனி வந்து நுழைகிறார். அப்பொழுது சனி துலாம் ராசியில் இருப்பார், தற்போது மேஷத்தில் குரு இருக்கிறார். இந்த இரண்டு ராஜ கிரகங்களும் நேருக்கு நேர் பார்க்கும் போது, இவற்றில் ஒன்று உச்சமாகும் போது மகான்கள் அவதரிப்பார்கள் என்று ஒரு ஐதீகம் உண்டு.

அதனால், துலாம் ராசியில் வந்து சனி உட்காரும் டிசம்பர் காலகட்டத்தில் இருந்து அவர் பிறப்பு உறுதியாகும். மறு அவதாரம் எடுக்க வாய்ப்பு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil