Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபன்ஹேகன் வானிலை மாற்ற மாநாடு வெற்றி பெறுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (17:37 IST)
இன்றைய சூழலில் மனிதனின் வாழ்வியல் தன்மை அதிகளவில் மாறிவிட்டது. ஒரு வீட்டில் ஒரு குளிர்சாதனப் பெட்டி இருந்த காலம் மாறி, அறைக்கு ஒரு குளிர் சாதனப் பெட்டி என்ற நிலை வந்து விட்டது. இதனால் வெளியேறும் வாயுக்கள் புவி வெப்பத்திற்கு காரணமாகிறது.

பொதுவாக கரியமில வாயுவுக்கு உரிய கிரகம் சனி. அந்த கோளை ஆய்வு செய்ததில் அங்கே கரியமில வாயுக்களுக்கான மூலக்கூறுகள் அதிகம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

சனிதான் நவீனத்துவத்திற்கு உரியவர். அதே சனிதான் எளிமைக்கும் உரியவர். ஒருவரின் ஜாதகத்தில் சனி வலுவாக இருக்கப் பெற்றால், அவர் உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி விட்டு, திடீரென ஒருநாள் அனைத்தையும் துறந்து துறவி போல் மாறி விடுவர்.

தற்போது கன்னி ராசியில் (உத்திரம், அஸ்தம், சித்திரை) சனி அமர்ந்துள்ளார். இதில் உத்திரம் நட்சத்திரம் சூரியனுடையது. அஸ்தம் நட்சத்திரம் சந்திரனுடையது. சித்திரை நட்சத்திரம் செவ்வாய் உடையது. இந்த 3 கோள்களும் பூமிக்கு நெருக்கமாக இருப்பவை. இதன் காரணமாகவே கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

சூரியன், செவ்வாய் (பூமி), சந்திரன் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகள் பல ஆண்டு காலமாக நடந்தாலும், கன்னி ராசிக்கு சனி வந்த பின்னர் அவற்றின் வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கூர்ந்து கவனித்தால் செப்டம்பர் 26, 2009 பின்னரே புவி வெப்பம், பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது தெரியவரும்.

செப்டம்பர் 26ஆம் தேதிக்கு முன்னர் இதுபற்றி அறிவியல் அறிஞர்கள் பல்வேறு எச்சரிக்கைகள், கருத்துகள் கூறியிருந்தாலும், செப்டம்பர் 26ஆம் தேதிக்குப் பின்னர் உலக நாடுகள் ஒன்றிணைந்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண முன்வந்துள்ளது தெரியவரும்.

கன்னியில் வந்து சனி அமர்ந்ததால் சூரியன், செவ்வாய் (பூமி), சந்திரன் ஆகிய மூன்றும் கெடும் வாய்ப்புள்ளது. சந்திரனில் சில அழிவுகள், மாற்றங்கள் ஏற்படும். கன்னியில் சனி இருக்கும் வரை பூமியிலும் இயற்கை பேரிடர் அதிகளவில் ஏற்படும்.

அடர்த்தியான பனிப்பாறைகளுக்கு உரிய கிரகமும் சனிதான். தற்போது சனி பகை நட்சத்திரங்களில் அமர்ந்துள்ளதால் உலகெங்கும் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகத் துவங்கும். 21/12/2011க்கு பிறகு துலாம் ராசிக்கு (சுக்கிரன் வீடு) வருகிறார்.

சுக்கிரனின் வீட்டிற்கு சனி வருவதால் ஆழிப்பேரலை (சுனாமி) ஆபத்துகள் மேலும் அதிகரிக்கும். கூட்டம் கூட்டமாக மக்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள நேரிடும். அண்டம் முழுமையாக அழியாமல், சிறு சிறு பகுதிகளாக பாதிப்படையும்; அழியும்.

இதிலிருந்து மனித இனம் தப்பிக்க வேண்டுமென்றால் மக்கள் தங்களை எளிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைப்பதை வைத்து திருப்தியடைய வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு, ஒரு வாகனம் போதும் என்ற மனப்பக்குவம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழல் மேம்படும். மனித வாழ்வு தழைக்க வாய்ப்பு ஏற்படும்.

கோபன்ஹேகன் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும், அவை வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. நடைமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments