Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக் காதலுக்காக பெற்ற மகனையே தாய் கொன்றது தமிழக மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது? இது போன்ற நிலை ஏன் ஏற்படுகிறது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
கள்ளக் காதலுக்காக பெற்ற மகனையே தாய் கொன்றது தமிழக மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது? இது போன்ற நிலை ஏன் ஏற்படுகிறது?

கடந்த முறை சனிப்பெயர்ச்சி (சிம்மத்திற்கு வந்த போது) நடந்த போது சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப் படைக்கும் எனக் கூறியிருந்தோம். இன்னும் சில நாட்களில் மீண்டும் சனிப்பெயர்ச்சி நடக்கப் போகிறது.

சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகும் சனியால், கள்ளக்காதல் போன்ற முறைகேடான சம்பவங்கள் அதிகரிக்கும். கள்ளக்காதலை அதிகரிக்கும் கன்னிச் சனி என்றுதான் இந்த சனிப்பெயர்ச்சிக்கு தலைப்பு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிதுனம், கன்னி ஆகியவை புதனின் சொந்த வீடுகளாகும். இதில் ரசனைக்கும், ரம்மியத்திற்கும் உரிய இடமாக கன்னி வீடு வருகிறது. அந்த இடத்தில் சனி அமர்ந்தால் எதையும் குறுக்கு வழியில் அடைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஒன்றிருக்க மற்றொன்றைத் தேடும் மனநிலை மனிதர்களிடையே மேலோங்கும். இது 2012ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.

கன்னிக்கு வரும் சனி, கள்ளக்காதல், களங்கமான காதல்களை அதிகரிப்பார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட சந்தர்ப்பங்களால், விதிவசப்படி, நெருக்கடி, அச்சுறுத்தல் காரணமாக நெறி தவற வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். அறிவிக்கப்படாமலேயே விபசாரங்கள் அதிகரிக்கும்.

மனித வாழ்வியல் நெறிமுறைகள் குறிக்கும் கன்னி வீட்டில், சனி அமர்வதால் அந்த நெறிமுறைகளை தகர்த்து எறிவார். இதனால் கள்ளக்காதல், நெறி தவறிய உறவுகள் அதிகரித்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அதனால் ஏற்படும் தீமைகளையும் மக்களுக்கு சனி உணர்த்துவார்.

எனவே, அனைத்து தரப்பினரும் இனி வரும் அடுத்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments