Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இர‌வி‌ல் கு‌ப்பையை‌க் கொ‌ட்ட‌க்கூடாதா?

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2011 (20:14 IST)
த‌‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: இரவில் குப்பையைக் கொட்டக் கூடாது என்று சொல்கிறார்கள். வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். விடிந்த பிறகுதான் கொட்ட வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர், சிவன் சாப்பிடும் நேரம், அந்த நேரத்தில் கொட்டினால் அது அவருடைய சாப்பாட்டிலேயே கொட்டியதாக ஆகும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதன் உண்மையான காரணம் என்ன. ஏன்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: குப்பை என்பது என்ன, நாம் பயன்படுத்தி மீதமானது. வெங்காயம் 4 நறுக்கினால் மீதி 4 வெங்காயம் வீட்டில் இருக்குமல்லவா, அதுமாதிரதான் கணக்கை முடிக்கக் கூடாது என்பார்கள். உபயோகப்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்பட்டப் பொருட்களின் எச்சம், தோல் பகுதி என்றே எடுத்துக்கொள்வோம். அதனை இரவோடு இரவாக தூக்கியெறியக் கூடாது. அப்படி எறிந்துவிட்டால் அந்தப் பொருளினுடைய அம்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் என்பது போன்றதுதான் அதன் அர்த்தம். அதனால்தான் இரவு நேரத்தில் குப்பையைக் கொட்டக் கூடாது என்பார்கள்.

குப்பையை சாதாரணப் பொருளாக நினைக்க வேண்டாம். ஏனென்றால் அதற்குள் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. தி.நகரில் ஒரு நகைக் கடை முதலாளி எனக்குத் தெரிந்து முதலில் எதுவுமே இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார். இன்றைக்கு பெரிய முதலாளி. அன்றைக்கு ஒன்றுமே இல்லாமல் சைக்கிளில் ஒரு பெடல் மட்டுமே இருக்கும். அதுபோன்ற நிலைமை. அதில் மூக்குத்தி பற்ற வைப்பது, தோடு பற்ற வைப்பது என்று செய்து கொண்டிருந்தார். ஐந்துக்கு ஐந்துதான் அவருடைய கடையினுடைய அளவு. அதில் அவர் உட்கார்ந்திருக்கும் போது, ஒரு நாள் சித்தர் போன்ற ஒருவர் ஒரு துண்டு நிறைய குப்பையைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போனார். அன்றைக்கு மறுநாளில் இருந்து ஒரு பெரியவருடைய தொடர்பு அவருக்குக் கிடைத்தது. அதை வைத்து இன்றைக்கு அவர் மிகப் பெரிய நகைக் கடை அதிபராக இருக்கிறார்.

குப்பை என்பது செல்வத்தின் அடையாளம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோன்ற செல்வத்தை கூட்டிப் பெறுக்கி கொண்டுபோய் இர‌வி‌ல் வெளியில் கொட்டிவிட்டு வரக்கூடாது. அதனால் செல்வம் தேயும். அதுதான் பெரியவர்கள் சொன்னது. சில வீடுகளில் விளக்கு வைத்த பிறகு பெறுக்கவே மாட்டார்கள். இதுபோன்று நிறைய விஷயங்கள் உண்டு. அதனால் குப்பையை சாதாரணமான விஷயமாகவே சொல்லக்கூடாது. அது லட்சுமியினுடைய வெளிப்பாடு, அதனால் இரவில் கொண்டுபோய் கொட்டக்கூடாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments