Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் நாளை வாக்கு பதிவு

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (20:38 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நாளை தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.


 

 
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திருப்பரக்குன்றம் சட்டசபை தொகுதியில் வேட்பாளர் மரணம் காரணமாக அந்த தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைப்பெறவுள்ளது.
 
இதற்காக அந்தந்த தொகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments