ஜெ.வின் கோரிக்கையை ஏற்றே ஜி.எஸ்.டி குறைப்பு - தம்பிதுரை புதிய விளக்கம்

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (13:35 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றே மத்திய அரசு ஜி.எஸ்.டியை குறைத்ததாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.


 

 
மத்திய அரசு அமுல்படுத்திய ஜி.எஸ்.டி-க்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இறங்கி வந்த மத்திய அரசு சமீபத்தில் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-ஐ குறைத்தது. 
 
இந்நிலையில், நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை “சசிகலா உறவினர்களிடம் நடத்தப்பட்டு வரும் வருமான வரி சோதனை குறித்து என்னால் எந்த கருத்தும் கூறமுடியாது. அதேபோல், அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. ஜி.எஸ்.டியில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. தற்போது, அவை நீக்கப்பட்டுள்ளது. 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னர் விடுத்த கோரிக்கைகளை ஏற்றே ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு இருப்பதாக புரிந்துகொள்ளலாம் எனவும் இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நாள்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை ஏற்படுமா?

கோட் சூட் செம ஸ்டைல்!.. முதல் ஆளாக போய் ஓட்டு போட்ட அஜித்!.. வைரல் வீடியோ..

திருமண மண்டபத்திற்குள் புகுந்த வெறிநாய்.. குழந்தைகள், பெண்கள் உட்பட 60 பேருக்குக் கடி!

விர்ஜின் பொண்ணுதான் வேணும்!. விவகாரத்து நபரின் ஆசையை பாருங்க!...

இந்த முறை மிஸ் ஆகாது!.. அமெரிக்காவின் சொத்துக்களை அழிப்போம்!. ஈரான் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments