இடைத்தேர்தல் நிறைவு; இறுதி நிலவரம் - அரவக்குறிச்சியில் 81.92 சதவீத ஓட்டுப்பதிவு

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (17:54 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு  நடைபெற்றது.


 


 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. துவக்கம் முதலே அரவக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. 
 
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகபட்சமாக 81.92 சதவீதம் பதிவாகியுள்ளது. அதேபோல் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இறுதி நிலவரப்படி,

அரவக்குறிச்சி - 81.92
 
தஞ்சாவூர் -69.02
 
திருப்பரங்குன்றம் -70.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
 
அதேபோல், பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில், நெல்லித்தோப்பு பகுதியில் 85.76 சதவீதம் ஓட்டுப் பதிவு நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments