Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கில்லாடி சரத்குமார். விழிபிதுங்கும் வருமான வரித்துறையினர்

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (04:48 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனிடம் இருந்து வெயிட்டான ஒரு தொகையை சரத்குமார் பெற்றுள்ளார் என்ற ரகசிய தகவலின்படிதான் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். ஆனால் சரத்குமார் வீட்டை சல்லடை போட்டு தேடியும் எந்த ஒரு பெரிய தொகையும் சிக்கவில்லை. பணம் வாங்கியது உண்மை என்று உளவுத்துறை தெரிவித்தும் அந்த பணம் எங்கே சென்றது என்று தெரியாமல் விழிபிதுங்கியது வருமான வரித்துறை



 


இதன் அடுத்தகட்டமாகத்தான் சரத்குமார் மனைவி ராடன் அலுவலகத்தில் 11 மணி நேரம் ரெய்டு நடந்தது. அங்கு நடந்த ரெய்டில் வருமான வரி ஏய்ப்பு செய்ததை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த நிலையில், 'அந்த' பணம் எங்கே சென்றது என்றே தெரியவில்லை

இந்த நிலையில் தன்னை விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுவேன் என்று சரத்குமார் நரம்பு புடைக்க ஆவேசமாக தனது தரப்பில் கூறி வருகின்றாராம்.  மொத்தத்தில் வருமான வரி சோதனை என்ற பெயரில் சரத்குமார் வீட்டிற்கு சென்று, அவர்கள் தங்கள் முகத்தில் கரியை பூசிக்கொண்டதுதான் மிச்சம் என்று சரத் தரப்பு சொல்லி சிரிக்கிறது. எங்கே போனது அந்த கோடிகள் என்று விழிபிதுங்கி வருமான வரித்துறையினர் நிற்பதாக தகவல்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments