Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர்செல்வத்தின் நிலை தான் உமக்கும்: அதிரடியில் தினகரன்; கவலையில் முதல்வர் எடப்பாடி!!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (12:09 IST)
சசிகலா தலைமையிலான புதிய ஆட்சிமன்ற குழுவை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த குழுவில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெறாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 


 
 
ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த போது ஆட்சிமன்ற குழுவில் ஜெயலலிதா தலைவராகவும், குழு உறுப்பினர்களாக மசூதுதனன், ஓ.பன்னீர்செல்வம், வேணுகோபால், ஜஸ்டின்ராஜ், தமிழ்மகன் உசேன் ஆகிய 5 பேர் இருந்தனர்.
 
இதை மாற்றி தற்போது, சசிகலா குழு தலைவராகவும்,  செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன், அ.தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, பி.வேணுகோபால், ஏ.ஜஸ்டின்ராஜ் ஆகியோர் உருப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ஆனால் இதில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
 
ஆளும் கட்சியில் மிக முக்கிய பதவி மற்றும் முதல்வராக இருக்கும் பழனிச்சாமியின் பெயர் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல கட்டளைகளை போட்டுள்ளார். அவற்றை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தாத காரணத்தினாலே ஆட்சிமன்ற குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் புறக்கணித்துள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதே நிலை நீடித்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர் செல்வத்தின் நிலை வந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments