Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வராது; தலைவர் மட்டும் வருவாரா? - ரஜினியை சீண்டும் சீமான்

Webdunia
புதன், 24 மே 2017 (12:48 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றி பரபரப்பான கருத்துகளை நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்து வருகிறார்.


 

 
தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும். ரஜினி கோடி கோடியாக பணத்தை சம்பாதிக்கட்டும். வேண்டுமானால், எங்களுக்கு அறிவுரைகள் சொல்லட்டும். நாங்கள் செய்து கொள்கிறோம். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என தொடர்ந்து பகீரங்கமாக கருத்து தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் “ ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஏற்க முடியாது. கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் வராது. ஆனால், தலைவர் மட்டும் வருவாரா?, காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது எங்கே போனது ஜனநாயகம்? இந்திய ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அப்போது எங்கே போனார்கள்? என சீமான் கேள்வி எழுப்பினார்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments