Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவிற்கு ஆதரவான கோஷம் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி

சசிகலாவிற்கு ஆதரவான கோஷம் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி
, வியாழன், 29 டிசம்பர் 2016 (18:54 IST)
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு ஆதரவாக சில அதிமுகவினர் கோஷம் எழுப்பியதால்,  ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்த விவகாரம் கரூரில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழகத்தை பொறுத்தவரை உட்கட்சி பூசல் இல்லாத கட்சி என்ற பெருமை வாய்ந்தது அ.தி.மு.க கட்சி மட்டும்தான். இரும்பு பெண்மணி ஜெயலலிதா இறந்ததையடுத்து தற்போது அவரது அண்ணன் மகள் தீபாவிற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு திரண்ட போதிலும், ஆங்காங்கே தம்பித்துரையை சார்ந்த அ.தி.மு.க, ஒ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க, சசிகலா பேரவை, சின்னம்மா பேரவை, எம்.ஜி.ஆர் அ.தி.மு.க, அம்மா தி.மு.க என்று பல்வேறு கட்சிகள் அ.தி.மு.கவிலேயே உதயமாகி வருகின்றது. 
 
தற்போது அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆங்காங்கே அ.தி.மு.க கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், தீபாவிற்கு பிளக்ஸ் மற்றும் போஸ்டர்கள் தற்போது புதிதாக ஒட்டப்பட்டுள்ளன. மேலும் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திலேயே சசிகலா போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது. 

webdunia

 

 
இந்நிலையில், சசிகலாவிற்கு ஆதரவாக, கரூரில் மதியம் 2 மணியளவிலேயே குறைந்த அளவிலான அ.தி.மு.க வினர் கலந்து கொண்டு வெடி வைத்து, பட்டாசு வைத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 
 
அப்போது சிலர், வருங்கால முதல்வர் எங்கள் சின்னம்மா என்று கோஷம் எழுப்பினர். இதைக் கேட்டு ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் உண்மையான அ.தி.மு.க வினர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள்.

- சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி, அனுஷ்கா நிச்சயதார்த்தம் ஜனவரி-1?