Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாதியை கொச்சைப்படுத்தாதீர்கள்: சசிகலா புஷ்பா ஆவேசம்!

சுவாதியை கொச்சைப்படுத்தாதீர்கள்: சசிகலா புஷ்பா ஆவேசம்!

சுவாதியை கொச்சைப்படுத்தாதீர்கள்: சசிகலா புஷ்பா ஆவேசம்!
, திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (15:03 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி குறித்தான எதிர்மறையான கருத்துக்களும் அவ்வப்போது வருகின்றன. இந்நிலையில் சுவாதியை கொச்சைப்படுத்தாதீர்கள் என மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.


 
 
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று ஆஜராக வந்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது, அதிமுக தலைமையை பின்னால் இருந்து யாரும் இயக்கக்கூடாது எனவும், தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தன்னுடன் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படித்தவர் எனவும் தெரிவித்தார்.
 
பெண்களை களங்கப்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்த சசிகலா புஷ்பா, சுவாதி, விஷ்ணு பிரியா ஆகியோரையும் சேர்த்து தான் என்றார். மேலும், தமிழகத்திற்கு இன்று தைரியமாக வந்ததுக்கு காரணம் ஊடகங்கள் தான் என்றும் அதற்கான நன்றியையும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது கார் மோதி ஒருவர் பலி