அதிமுக இரு அணி பேச்சு வார்த்தை ; அனைத்தும் நாடகம் : விளாசும் சசிகலா புஷ்பா

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (12:17 IST)
அதிமுகவில் இரு அணிகளும் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறி வருவது அனைத்தும் நாடகம் என அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி ஆகிய இரண்டும் எப்போது பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரும் என்பதுதான் தமிழக அரசியலில் பெரிய கேள்வியாக இருக்கிறது. இதுதான் தற்போது செய்தியாகவும் இருக்கிறது.
 
இந்நிலையில், இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சசிகலா புஷ்பா “ஒ.பி.எஸ், எடப்பாடி அணிகளிடையே தற்போது அதிகாரப்போட்டி நிலவுகிறது. நியாயமானவர்கள் போல் தங்களை காட்டிக் கொண்டு, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரையும் ஏமாற்றி நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திற்கு தேவை கொள்கை சார்ந்த அரசியல் கட்சியே” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments