Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டனில் கேக் வெட்டி கொண்டாடினாரா சசிகலா?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (16:21 IST)
அதிமுக அமைச்சர்களுடன், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போயஸ் கார்டனில் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது கேக் வெட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக பொருளாலராக உள்ள சசிகலா, தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என அமைச்சர் தம்பிதுரை முதல் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிமுகவின் அனைத்து அமைச்சர்களுக்கும் போயஸ் கார்டன் வரும்படி அழைப்பு விடப்பட்டது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் அனைவரும் ஆஜராகினார்கள்.
 
அப்போது, கார்டனில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சசிகலா திறந்து வைத்துள்ளார். அதன்பின் அவர் அமைச்சர்களிடம் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும், புத்தாண்டையொட்டி, ஜெயலலிதா மற்றும் சசிகலா உருவப்படம் பொதிந்த கேக்கை சசிகலா வெட்டினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஜெயலலிதா மறைந்து ஒரு மாதம் முடிவடையாத நிலையில் கார்டனில் கேக் வெட்டப்பட்ட விவகாரம் அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும், அதிமுக அமைச்சர்கள் அனைவரிடமும் கையெழுத்து வாங்கியுள்ளனராம். சசிகலா முதல்வராகத்தான் இந்த கையெழுத்து பெறப்பட்டிக்கும் என சில அமைச்சர்கள் கருதியதால் அனைவருக்கும் அது கிலியை ஏற்படுத்தியுள்ளதாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments