Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்குமார் கட்சியின் வேட்பாளர் மனு நிராகரிப்பு...

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (14:14 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


 

 
நடிகர் சரத்குமார் அதில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முந்தைய தேர்தல்களில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து அவர் தேர்தலை சந்தித்து வந்தார்.
 
ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என அவர் அறிவித்திருந்தார். அதன்படி அந்தோணி சேவியர் என்பவரை அவர் களம் இறக்கினார்.
 
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் தினகரன், தீபா, மதுசூதனன் மற்றும் சரத்குமார் கட்சியின் வேட்பாளர் அந்தோணி ஆகியோர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். 
 
வேட்பு மனுக்களை சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது. அதில், சமத்துவ மக்கள்  கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியரின் வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அதோடு, அவருக்கான மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த விவகாரம் சரத்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments