Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதனால்தான் ஓ.பி.எஸ்-ஐ ராஜினாமா செய்ய வைத்தனர் - மாஃபா பாண்டியராஜன் தகவல்

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (16:04 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்யும் முடிவில் ஓ.பன்னீர் செல்வம் இருந்ததாலேயே அவரை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பு அவரிடம் ராஜினாமா கடிதத்தை பெற்றது என அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான மாஃபா பாண்டியராஜன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.


 

 
இதுபற்றி செய்தியாளர்களிடம் மாஃபா பாண்டியராஜன் குறியதாவது:
 
ஓ.பி.எஸ்-ஸிற்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததனால், தொகுதி மக்கள் கோபத்தில் உள்ளனர். இது அந்த எம்.எல்.ஏக்களின் மனதை உலுக்க தொடங்கியுள்ளது. 
 
எனவே, இன்னும் 10 நாளில் சட்டசபை கூட்டப்பட வேண்டும். அப்போது ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைப்போம். அதில் ஒரு 6 பேர் மாறி வாக்களித்தால் கூட அதன் விளைவு வேறு மாதிரி இருக்கும். பொதுக்குழுவை கூட்டி விசாரித்தால், பெரும்பாலானோரின் ஆதரவு எங்களுக்கு இருப்பது தெரிந்து விடும். எனவேதான், இன்னும் அதை கூட்டாமல் தாமதம் செய்து வருகிறார்கள். 
 
ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற முயற்சிக்கு பின்னரே, ஓ.பி.எஸ் நிர்பந்திக்கப்பட்டு ராஜினாமா செய்யப்பட்டார். ஜெ.வின் மரணம் குறித்து நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments