Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பாவின் துணிச்சலை பாராட்டுகிறேன் : பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (14:23 IST)
திமுக எம்.பி.திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த விவகாரத்தையொட்டி அதிமுக தலைமை சசிகலா புஷ்பாவை அழைத்து விளக்கம் கேட்டது. 


 

 
அதனையடுத்து அன்று மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, கட்சி தலைவரால் நான் துன்புறுத்தப்பட்டேன் எனவும், அவர் என்னை கன்னத்தில் அறைந்தார் எனவும் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தன்னுடைய குழந்தைகளுடன் பேச என்னை அனுமதிக்கவில்லை. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கண்ணீர் மல்க கூறி, தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதோடு, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்துகிறார்கள். ஆனால் எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் ராஜினாமா செய்ய போவதில்லை என்றும்  அவர் கூறினர்.
 
இந்த விவகாரம் பற்றி, ஒரு வார பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் “தன்னை ஜெயலலிதா அடித்தார் என்றும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் சசிகலா புஷ்பா வெளிப்படையாக கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுகவின் பைக்குள் இருந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. சசிகலா புஷ்பாவின் தைரியத்தை பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments