Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா முதல் அமைச்சராக 75.13 சதவீத மக்கள் எதிர்ப்பு - சர்வே தகவல்

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2017 (08:40 IST)
அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவின் தலைமைக்கு 75.13 சதவீத மக்கள் எதிப்பு தெரிவித்திருப்பது ஜூனியர் விகடன் நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமரவைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 
அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக நின்றாலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அவருக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரபல வார இதழ் ஜூனியர் விகடன் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது.  மொத்தம் 11 ஆயிரத்து 174 பேரிடம் சசிகலா முதல்வர் ஆவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதில் 75.13 சதவீத மக்கள் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அவர் முதலமைச்சராக வரக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.
 
ஏற்கனவே அதிமுக தொண்டர்களிடன் நக்கீரன் நடத்திய சர்வேயில் 63 சதவீதம் பேர் சசிகலா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், மக்கள் நலனுக்காக போராடும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சமீபத்தில் நடத்திய ஆன்லைன் சர்வேயில் சசிகலாவிற்கு எதிராக 97 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments