Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்தின் முன்பு ஓபிஎஸ் ஆதரவு மைத்ரேயன் எம்பி தர்ணா!

தேர்தல் ஆணையத்தின் முன்பு ஓபிஎஸ் ஆதரவு மைத்ரேயன் எம்பி தர்ணா!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (13:12 IST)
அதிமுகவின் இரட்டை இலை விவகாரம், சசிகலாவின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி செல்லுமா? செல்லாதா? போன்ற விவகாரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்பி தேர்தல் ஆணையத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அதிமுக எங்களுக்கே சொந்தம் என சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் தேர்தல் ஆணையத்தில் மல்லுக்கட்டி வருகிறது. இதில் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்களுக்கு தான் ஆதரவளிக்கின்றனர் என தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலா அணி சார்பில் 4 லாரிகளில் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினரும் தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு சாதகமான ஆவணங்களை தாக்கல் செய்ய வந்தனர்.
 
அப்போது தேர்தல் ஆணையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து பாதுகாவலர்கள் ஓபிஎஸ் அணியினரின் வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் எம்பி தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே நாற்காலி போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments