Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஆட்சி கலைப்பா? தனித்தனியாக பிரதமரை சந்தித்த ஓபிஎஸ்-தினகரன் அணி

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (00:02 IST)
தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, அமைச்சர்கள் வீடுகளின் வருமானவரித்துறை சோதனை ஆகிய அசாதாரண சூழ்நிலை நிகழ்ந்து வருவதால் தமிழகத்தில் ஆட்சியை கலைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.



 


இந்த நிலையில் ஆட்சியை கலைக்கக்கூடாது என்பதற்காக தினகரன் அணியும்,கலைக்க வலியுறுத்தி ஓபிஎஸ் அணியும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இதை உறுதி செய்வது போல் இன்று மாலை பிரதமர் மோடியை தினகரன் அணியை சேர்ந்தவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை சந்தித்தார். அவர் சந்தித்து முடித்த ஒருசில நிமிடங்களில் ஓபிஎஸ் அணி ஆதரவு எம்பி மைத்ரேயன், பிரதமர் மோடியை சந்தித்தார்.

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்வதற்காகவும் மற்றும் நட்புரீதியிலும் பிரதமர் மோடியை சந்தித்ததாக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இரு அணியை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments