காலியாகிறது தினகரன் கூடாரம்: மேலும் ஒரு விக்கெட் இழப்பு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (00:20 IST)
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த வழக்கு முடிய எத்தனை மாதம் ஆகுமோ தெரியாது, அப்படியே தினகரன் அணிக்கு சாதகமாக வழக்கு முடிந்தாலும் எடப்பாடி அணியினர் அப்பீலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் எப்போது எம்.எல்.ஏ ஆவார்கள் என்பது சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



 
 
எனவே இப்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தினகரன் அணியின் கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
முதல்கட்டமாக நெல்லை மாவட்டம், தென்காசி தொகுதி (தனி) எம்.பி- யான வசந்தி முருகேசன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. வசந்தியை அடுத்து இன்னும் 6 எம்பிக்களும் எடப்பாடி அணிக்கு எப்போது வேண்டுமானாலும் தாவுவதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments