Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் நலக்கூட்டணியில் பிளவு?: வைகோ கருத்துக்கு முத்தரசன் எதிர்ப்பு

மக்கள் நலக்கூட்டணியில் பிளவு?: வைகோ கருத்துக்கு முத்தரசன் எதிர்ப்பு
, திங்கள், 28 நவம்பர் 2016 (12:07 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ ஆதரித்து பேசினார். இது மக்கள் நலக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. காரணம் அக்கூட்டணியில் உள்ள திருமாவளவன்,முத்தரசன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் மோடியின் இந்த திட்டத்தினை எதிர்த்து பேசி வருகின்றனர்.


 

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியபோது,

கருப்பு பண ஒழிப்புக்காக ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை  என்ற பிரதமரின் இந்த நடவடிக்கை சாதாரண மக்களைத்தான் பாதிக்கிறது. மோடியின் நடவடிக்கையை வைகோ ஆதரிப்பதாக கூறுகிறார். பிரதமரை வைகோ திடீரென ஆதரிப்பதற்கு காரணம் என்ன என்பதற்கு வைகோதான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகள் மாறியதாக குழப்பம் - தாய் கண்ணீர்