Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதுகாப்புக்கு திகார் ஜெயில் போங்க: சசிகலாவை விளாசிய கர்நாடக சிறைத்துறை!!

பாதுகாப்புக்கு திகார் ஜெயில் போங்க: சசிகலாவை விளாசிய கர்நாடக சிறைத்துறை!!
, புதன், 22 பிப்ரவரி 2017 (12:10 IST)
பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றால், டெல்லி திகார் சிறைக்கு மாற்றலாம் என என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சசிகலாவுக்கு பெங்களூர் சிறையில் பாதுகாப்பில்லை என்றும், அவரை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரி வருகின்றனர். 
 
எனவே, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சிறை மாற்றத்துக்கு சசிகலா கோரினால், அவரை திகார் சிறைக்கு வேண்டுமானால் மாற்றலாம். எனெனில் இந்தியாவிலேயே நவீன, பாதுகாப்பான சிறை திகார் தான் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஆனால் உளவுத் துறையின் அறிக்கைப் படி கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என கூறப்படுகிறது.
 
இருப்பினும் தமிழக சிறைக்கு மாற்றல் கோருவது, இங்கு சகல வசதிகளுடனும் இருக்கலாம் என்ற ஒரே காரணம் தான் எனவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவிற்கு சலுகை ; சொகுசாக வாழ்வதற்கு பெயர் தண்டைனையா? - ஆச்சார்யா விளாசல்