Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவிடருக்கு ஊதிய டெங்கு சங்கு வீண்: அரசு தூங்குகிறது: கமல்ஹாசன் காட்டம்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (05:00 IST)
கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசை குறிவைத்து தனது டுவிட்டரில் தாக்கி வரும் கமல்ஹாசன் நேற்று டெங்குவால் பலியான மாணவர் ஒருவரை குறிப்பிட்டு இரண்டு டுவீட்டுக்களை காட்டமாக பதிவு செய்துள்ளார்.



 
 
அதில் 'செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்' என்று ஒரு டுவீட்டும், 'அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்' என்று இன்னொரு டுவீட்டையும் பதிவு செய்துள்ளார்/
 
நேற்று சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் உயிரிழந்தச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டே கமல்ஹாசன் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜூலை 20ஆம் தேதி 'பள்ளிப் படிப்பை முடிக்காதவன் " நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம், என்று டெங்கு குறித்து அவர் டுவீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments