Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய ஜெயலலிதா....

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (13:06 IST)
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவிற்கு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து வாழ்த்து தெரிவிப்பது போல் ஒரு பேனரை அதிமுகவினர் வைத்துள்ளனர்.


 

 
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிமுக பொதுக்குழு இன்று காலை கூடியது. அதில் ஜெ.வின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
 
அதன்பின், போயஸ் கார்டன் சென்று, தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிடம் கொடுத்தார். அதை வாங்கிய சசிகலா, அங்கிருந்த ஜெ.வின் உருவப்படத்திற்கு கீழே வைத்து கண்ணீருடன் வணங்கினார். அப்போது அவர் தேம்பி தேம்பி அழுதார். சிறுது நேரம் மவுனமாக ஜெ.வின் படம் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.
 
அதன்பின், கழகத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக சசிகலா சம்மதமும் தெரிவித்ததாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
 
இந்நிலையில், பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சசிகலாவிற்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பது போல் ஒரு பேனரை அதிமுகவினர் உருவாக்கியுள்ளனர்.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments