Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் கொடுக்க வேண்டாம்.. போட்டியிட வாருங்கள் : அதாள பாதாளத்தில் தேமுதிக

பணம் கொடுக்க வேண்டாம்.. போட்டியிட வாருங்கள் : அதாள பாதாளத்தில் தேமுதிக

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (12:38 IST)
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக தொண்டர்கள் ஆர்வம் காட்டாத விவகாரம், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.


 

 
உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டது தேர்தல் ஆணையம். ஆளும் கட்சியான அதிமுக, வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. எதிர்கட்சியான திமுகவும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. மதிமுக, தாமக என அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக களம் இறங்கிவிட்டன.
 
ஆனால், தேமுதிக என்ற கட்சி இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சமீபத்தில் விஜயகாந்த் தனது நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால், சட்டசபை தேர்தலில் நிறைய செலவு செய்துவிட்டதால், உள்ளாட்சி தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
 
ஆனால், அதை விஜயகாந்த் நிராகரித்து விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த பல தேமுதிக நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு தாவிவிட்டனர்.  
 
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக நிர்வாகிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே,  ‘வேட்புமனுவிற்கு பணம் கூட கொடுக்க வேண்டும்.. அவர்களை போட்டியிட சொல்லுங்கள்’ என்று விஜயகாந்த் கூறியுள்ளார். ஆனாலும், எத்தனை பேர் போட்டியிட முன் வருவார்கள் என்று தெரியவில்லை என்று தேமுதிக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

அடுத்த கட்டுரையில்
Show comments