Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் தினகரன் போட்டி - அறிவிப்பு வெளியானது

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (10:20 IST)
ஆர்.கே.நகரில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். எனவே, அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.   
 
இந்நிலையில், அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் யார் போட்டியிடுகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதில், தினகரனே போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயத்தில்  கலைராஜன், ஆதிராஜாராம், கோகுல இந்திரா உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில் அதிமுகவின் ஆட்சி மன்ற குழு இன்று காலை கூடுகிறது. அதில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
 
அதன்படி,  தற்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என கூறினார்.மேலும், இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

தங்கம் விலையில் இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம்..!

கயா நகரின் பெயரை மாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. புதிய பெயர் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments