Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லோரையும் மிரட்டி பதவிக்கு வந்துள்ளார் சசிகலா - எம்.ஜி.ஆர் உறவினர் தீபன் பேட்டி

எல்லோரையும் மிரட்டி பதவிக்கு வந்துள்ளார் சசிகலா - எம்.ஜி.ஆர் உறவினர் தீபன் பேட்டி
, திங்கள், 2 ஜனவரி 2017 (11:56 IST)
அதிமுகவினரை மிரட்டி பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா வந்துள்ளார் என எம்.ஜி.ஆரின் உறவினர் தீபன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
முதல் மரியாதை படத்தில் ரஞ்சனிக்கு ஜோடியாக நடித்திருந்த தீபனை யாரும் அவ்வளவு எளிதாக  மறந்திருக்க முடியாது. இவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் தம்பி மகன் ஆவார். எம்.ஜி.ஆர் மறைந்த போது, அவரது உடலை சுமந்து சென்ற ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை கீழே  தள்ளியது இவர்தான். 
 
இந்நிலையில், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா ஆகியிருப்பது வருத்தமான விஷயம். கட்சியில் பலரை மிரட்டி அந்த பதவிக்கு வந்துள்ளார் சசிகலா. கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மிரட்டிதான் இதை அவர் சாதித்துள்ளார். ஆனந்தராஜ் போன்ற நடிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
அவரைப் போல் ஏராளமான அதிமுகவினர் கோபமாக இருக்கிறார்கள். எல்லாம் போக போக வெளியே வரும். சசிகலாவால் அதிமுக கட்சியை திறம்பட வழிநடத்த முடியாது. இது அவரின் பேராசை. முக்கியமாக அவர் இந்த பதவிக்கு வந்ததில் தமிழக பெண்களுக்கு துளியளவும் விருப்பம் இல்லை” என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ.வை காப்பாற்ற முடியாத சசிகலா கட்சியை எப்படி காப்பாற்றுவார்? - தீபன் அதிரடி