Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ; தீபாவின் விருப்பம் சேவல் சின்னம்?

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (15:27 IST)
விரைவில் நடக்கவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா சேவல் சின்னத்தை பெற முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. இந்த தேர்தலில், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில், இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என ஓ.பி.எஸ் அணி மற்றும் சுதாகரன் அணி ஆகிய இரண்டு அணிகளும் கூறி வருகிறது. இதில் தீபா எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 
 
இந்நிலையில் அவர் சேவல் சின்னத்தை குறி வைத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்த போது, இரட்டை இலை சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. எனவே, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இரட்டைப்புறா சின்னத்திலும்,  ஜெயலலிதா, சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர். எனவே, செண்டிமெண்ட்டாக, அதே சின்னத்தை தேர்தல் கமிஷனிடம் கேட்டுப் பெறும் எண்ணத்தில் தீபா இருப்பதாக தெரிகிறது. 
 
எவ்வளவு முயன்றும் சேவல் சின்னம் கிடைக்கவில்லை எனில் மட்டுமே, அடுத்த சின்னம் பற்றி அவர் யோசிப்பார் என தீபாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments