Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலிப்படையினர் மிரட்டல் ; வீட்டிலேயே இருக்க முடியவில்லை - தீபா ஓபன் டாக்

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (10:53 IST)
அரசியலில் இருந்து விலகும் படி கூலிப்படையினர் தன்னை மிரட்டுவதாக ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


 

 
நேற்று இரவு 8.30 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெ.வின் சமாதிக்கு தீபா வந்தார். அதன் பின் சுமார் 40 நிமிடம் அங்கு தியானம் இருந்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ நான் அரசியல்லுக்கு வந்த பின் ஏராளமான மிரட்டல்கள் வருகிறது. என்னை கொலை செய்து விடுவதாக கூலிப்படையினர் மிரட்டுகின்றனர்.  முக்கியமாக, ஆர்.கே. நகர் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என மிரட்டுகின்றனர்.
 
என்னால் வீட்டிலேயே இருக்க முடியவில்லை. இவர்களெல்லாம் யார் என்றே எனக்கு தெரியவில்லை. நீங்கள் யார் எனக் கேட்டால், அவர்களின் பெயரைத்தான் மறைமுகமாக கூறுகிறார்கள்.  நான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதை தடுக்க பல வழிகளில் சதி செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை” என அவர் பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments