Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சந்திரகுமார் மரியாதையை காப்பாற்ற முடியாத மனிதராகிவிட்டார்' - பார்த்தசாரதி தாக்கு

'சந்திரகுமார் மரியாதையை காப்பாற்ற முடியாத மனிதராகிவிட்டார்' - பார்த்தசாரதி தாக்கு
, வியாழன், 28 ஜூலை 2016 (19:13 IST)
சந்திரகுமார் தேமுதிகவில் இருந்தவரை என்ன மரியாதை தரப்பட்டது?. இப்போது கொடுத்த மரியாதையை காப்பாற்ற முடியாத மனிதராகிவிட்டார் என்று தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
 

 
தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் கரூர் மாவட்ட வெங்கமேட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பார்த்தசாரதியும் பங்கேற்றார்.
 
அப்போது பேசிய பார்த்தசாரதி, "தேமுதிகவின் உண்மை தொண்டர்கள் யாரும் வேறு கட்சிக்கு செல்லவில்லை. பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டவர்கள் போகிறார்கள். இங்கு புலியாக இருந்தவர்கள் அங்கு எலியாக நிற்கிறார்கள்.
 
சந்திரகுமார் தேமுதிகவில் இருந்தவரை என்ன மரியாதை தரப்பட்டது?. இப்போது கொடுத்த மரியாதையை காப்பாற்ற முடியாத மனிதராகிவிட்டார். அறிவாலயத்தில் யார், யாருக்கெல்லாமோ காத்துகிடக்கிறார்.
 
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 13 ஆண்டுகள் கருணாநிதியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதனால் தான் கறுப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் முதல்வராகி விட்டால் இந்த இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போய்விடும் என அச்சப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாருக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி போலீஸ் காவல்: நீதிமன்றம் உத்தரவு