Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகிற இடத்திலாவது விசுவசமாக இருங்கள்: நிர்மலாவுக்கு சி.ஆர்.சரஸ்வதி அறிவுரை

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (05:28 IST)
நேற்று காலை நடைபெற்ற அதிமுக நட்சத்திர பேச்சாளர்களின் கூட்டத்தில் நிர்மலா பெரியசாமி ஒரு புயலை கிளப்பிவிட்டது அதிமுகவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா அணியின் கூட்டத்தில் ஓபிஎஸ் குறித்து பெருமையாக பேசிய நிர்மலா பெரியசாமியை வளர்மதி மற்றும் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்ட விவகாரம் தெரிந்ததே




இதனால் அதிருப்தி அடைந்த நிர்மலா, நேற்று மாலையே ஓபிஎஸ் அவர்களுக்கு தனது ஆதரவு என்று அறிவித்துவிட்டார். இதனால் கூடுதலாக ஒரு பேச்சாளரை பெற்றுள்ள ஓபிஎஸ் அணி அவரை ஆர்கே நகர் தேர்தலுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது

இந்நிலையில் நிர்மலாவின் வெளியேற்றம் குறித்து கருத்து தெரிவித்த சி.ஆர்.சரஸ்வதி, 'நிர்மலா பெரியசாமி போகிற இடத்திலாவது விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரைவில் தான் எடுத்த முடிவு தவறு என்பதை புரிந்து கொள்வார்' என்றும் கூறினார்.

இன்று இரட்டை இலை குறித்த தேர்தல் கமிஷனின் முடிவு வெளிவந்தவுடன் சசிகலா கூடாரம் காலியாகிவிடும் என்றும் ஓபிஎஸ் அணி வலுவடையும் என்றும் கூறபடுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments