தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் மற்ற அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தினமும் போயஸ் கார்டனுக்கு வந்து செல்ல வேண்டும் என சசிகலா குடும்பத்தினர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெ. உயிரோடு இருந்த வரை அவரை சந்திப்பதற்காக, ஏராளமான அமைச்சர்கள் தினமும் போயஸ்கார்டன் செல்வார்கள். அவரின் மறைவிற்கு பின் அதுபோல் செல்ல தேவையில்லை என அமைச்சர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், சசிகலா பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டவுடன், அவரை சந்திக்க போயஸ் கார்டன் செல்ல வேண்டிய நிலை அமைச்சர்களுக்கு ஏற்பட்டது.
ஓ. பன்னீர் செல்வம் முதல் மற்ற அமைச்சர்கள் அனைவரும் தினமும் போயஸ்கார்டனுக்கு வந்த செல்ல வேண்டும் என சசிகலா குடும்பத்தினர் உத்தரவு பிறப்பித்துள்ளனராம். முக்கிய பணி இருந்தால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மட்டும் வரத்தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளதாம்.
இதனால் அனைத்து அமைச்சர்களும் தினமும் காலை போயஸ் கார்டன் சென்று விட்டு, அதன்பின் தலைமை செயலகம் செல்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!