Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ்-ற்கு மேலும் 2 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு - உடையும் சசிகலா கூடாரம்

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (10:21 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், இதுவரை அவருக்கு 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், மாநிலங்களவை எம்.பி.மைத்ரேயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
ஆனால், மக்களவை எம்.பி.க்கள் யாரும் இதுவரை அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார் மற்றும் நாமக்கல் எம்.பி ஜி.ஆர் குமார் ஆகியோர் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விரைவில் ஓ.பி.எஸ் வீட்டிற்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டு, செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
எம்.பி.க்களும் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவிப்பது தொடங்கி விட்டதால், அவருடைய பலம் அதிகரித்து வருகிறது. அதேபோல், சசிகலா தரப்பில் பலம் குறைந்து வருகிறது..

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments