Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ்-ற்கு மேலும் 2 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு - உடையும் சசிகலா கூடாரம்

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (10:21 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், இதுவரை அவருக்கு 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், மாநிலங்களவை எம்.பி.மைத்ரேயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
ஆனால், மக்களவை எம்.பி.க்கள் யாரும் இதுவரை அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார் மற்றும் நாமக்கல் எம்.பி ஜி.ஆர் குமார் ஆகியோர் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விரைவில் ஓ.பி.எஸ் வீட்டிற்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டு, செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
எம்.பி.க்களும் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவிப்பது தொடங்கி விட்டதால், அவருடைய பலம் அதிகரித்து வருகிறது. அதேபோல், சசிகலா தரப்பில் பலம் குறைந்து வருகிறது..
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments