Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8ஆ‌ம் தே‌தி முத‌ல் மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு - மழைரா‌ஜ்

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2012 (21:00 IST)
தெ‌ன்மே‌ற்கு பருவ மழை ‌தீ‌விரமடை‌ந்து வருவதா‌ல் வரு‌ம் 8ஆ‌ம் தே‌தி முத‌ல் த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் பரவலாக பல‌த்த மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளதாக மழை கு‌றி‌த்து ஆ‌ய்வு மே‌ற்கொ‌‌ண்டு வரு‌ம் மழைரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் அனு‌ப்‌பியு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பு வருமாறு:

கடந்த கடந்த ஜுலை 24 ம்தேதி அனுப்பிய கடிதத்தில் கடந்த இரண்டு மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் வேதனை எனவும், அரபி கடல் பகுதியில் மழைக்கான வாய்ப்பு குறைந்ததால் மழை பெய்யவில்லை எனவும், வங்க கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் மழையின் தீவிரம் அதிகமாகும் எனவும், வடக்கு ஆந்திரா உள்பட ஆந்திரா, ஒரிஸா மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் கர்நாடாகா மற்றும் வடக்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதுடன், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் எனவும் தெரிவித்திருந்தேன்.

அதே போல் தற்போது வட இந்தியாவிலும், கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா உள்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. எனவ ே விரைவில் மேட்டூர் அணையும் நிறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்பதால் இந்தியாவில் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இந்தியாவில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜுலை 29 ம்தேதி கடிதத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது எனவும், தமிழகத்தில் ஆகஸ்ட் 3 ம்தேதி முதல் 5ஆம் தேதி வரையும் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தேன். ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை துவங்கியது. தொடர்ந்து வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழை ஆகஸ்ட் 8 ம்தேதி முதல் 17 ம்தேதி வரை பெரும்பாலான நாட்களில் வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், விவசாயிகள் மானாவாரி பயிர் செய்யவும் ஏற்றதாக இருக்கும்.

தென் தமிழகத்தில் கடந்த காலங்களைவிட சற்று கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

Show comments