Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

Webdunia
புதன், 22 டிசம்பர் 2010 (19:52 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 முதல் 27ஆம் தேதி தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப ்‌பி‌ல்,

டிசம்பர் 22ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தொண்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டிசம்பர் 24 முதல் 27ஆம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் பெரும்பாலான வட மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மழை தேதி கணிப்பின்படி டிசம்பர் 29, 30 மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும்.

ஏற்கனவே வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் டிசம்பர் 20ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தது போல் அன்று இரவு ஈரானில் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர். 3 கிராமங்கள் பலத்த சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று மழைராஜ் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments