Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூரியா விலையை உயர்த்த கோரிக்கை

Webdunia
புதன், 5 ஜனவரி 2011 (16:35 IST)
பொட்டாஷ், பாஸ்பேட் விலைகள் உயர்ந்துள்ளதால் யூரியாவின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று உர உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

யூரியா விலை உயராத நிலையில், பொட்டாஷ், பாஸ்பேட் விலைகள் உயர்வதால், விவசாயிகள் யூரியாவை அதிகம் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ள உர உற்பத்தியாளர்கள், அது மண்ணை பெரிதும் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.

அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தவிர்க்க பொட்டாஷ், பாஸ்பேட் விலைகளை அரசு உடனடியாக உயர்த்துவது அவசியம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

எனவே யூரியா விலையை உயர்த்துவதன் மூலம் இந்த மூன்று உரங்களையும் சம அளவில் பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்றும், அது மண்ணிற்கும், உற்பத்திக்கும் உதவும் என்று கூறியுள்ளது.

ஆயினும் இப்போதுள்ள நிலையில் உர விலைகளை அரசு உயர்த்த அனுமதிக்காது என்றே கூறப்படுகிறது. யூரியாவை மத்திய அரசின் விலைக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க உர அமைச்சகம் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது அரசியல் ரீதியாக பிரச்சனைகளை உருவாக்கிவிடும் என்று அரசு கருதுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments