காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது.
கடந்த 16ஆம் தேதி விநாடிக்கு 6,059 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 3,166 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 88.51 அடி. நீர் இருப்பு 50.96 டி.எம்.சி.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.32 அடி ஆகும். அணைக்கு விநாடிக்கு 3,154 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது என்றும் அணையில் இருந்து 6,009 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.