தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2011 (16:49 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

ஜனவரி 26ஆம் தேதி கணிப்பின்படி ஜனவரி 27 முதல் 30 ஆம் தேதி வரை மிதமானது பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பனை மையமாகக் கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதியின் கணிப்பின்படியும், வானிலை கணிப்பின்படியும் ஜனவரி 30ஆம் தேதிக்குள் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ரஷ்யா அல்லது ஜப்பானாக இருக்க வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..

Show comments