Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரமடையும்: மழை ராஜ்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2011 (19:05 IST)
அக்டோபர் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் நிலை உள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழை ராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று கொடுத்துள்ள வானிலை முன் கணிப்பு வருமாற ு:

அக்டோபர் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கடலூர், புதுவை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் புதுக்கோட்டை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை, அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், புதுவை, விழுப்புரம், திருவாரூர், சென்னை ஆகிய இடங்களில் கூடுதலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் வரலாறு காணாத மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பரு்வ மழை கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய கேரளம், வடக்கு கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிலநடுக்கத் தேதி கணிப்பின்படி, அக்டோபர் 18ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

Show comments